Tuesday, 21 September 2021

மகாபாரதம் 60 லட்சம் ஸ்லோகங்கள்

மகாபாரதம் 60 லட்சம் ஸ்லோகங்கள்

மகாபாரதம் நம்மிடம் வந்த வரலாறு

இன்று நம்மிடம் உள்ள மகாபாரதக்கதை இவ்வாறாக நம்மிடம் வந்துள்ளதாக ஆன்றோர்கள் கூறுகின்றனர். 

இமயமலையில் வியாசர் கடும் தவம் செய்த போது அவருடைய சிந்தனையில் உதித்ததே மகாபாரத வரலாறு. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடு என உத்தரவிட்டார்.

பாடுகின்றவரே எழுதினால் பாடுகின்ற வேகம் தடைபடக் கூடும் என்று எண்ணினார் வியாசர். ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று சிந்தித்த போது விநாயகர் தான் அதற்கு ஏற்றவர் என வியாசர் முடிவு செய்தார்.

விநாயகரை அழைத்து மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என வேண்டினார். சம்மதம் தெரிவித்த விநாயகர் நான் வேகமாக எழுதுவேன். நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா எனக் கேள்வி எழுப்பினார். அதைக் கேட்டு வியாசர் சற்று நேரம் திகைத்தார். ஒரு நொடிப் பொழுது சிந்தித்த வியாசர், பொருள் தெரிந்து எழுதுவதென்றால் வேகமாக எழுத முடியாது என எண்ணினார். “நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப நான் பாடுவேன். ஆனால் பொருள் தெரிந்து தான் எழுத வேண்டும்” என மறுமொழி கூறினார் வியாசர்.

விநாயகரும் அதற்கு ஒப்புக்கொண்டு தமது கொம்பினால் மேரு மலையில் மகாபாரதத்தை எழுதலானார். வியாசர் பாடிய 60 லட்சம் ஸ்லோகங்களில் விநாயகர் எழுதும் வேகத்தை மட்டுப்படுத்த, வேண்டிய இடங்களில் கடினமான பதங்களை அமைத்து 8800 ஸ்லோகங்கள் பாடினார்.

இதற்கு என்ன பொருள் என விநாயகர் சிறிது சிந்திக்கும் வேளைக்குள் வியாசர் அடுத்த பல ஸ்லோகங்களை மனதில் ஆயத்தம் செய்து கொண்டார். 

இவ்வாறு தொடர்ந்து 3 ஆண்டு காலம் மகாபாரதம் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வியாசரால் பாடப்பட்டு விநாயக பெருமானால் எழுதப்பட்ட மகாபாரதம் 60 லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டிருந்தது. பின்னர் நாரதர் அதை தேவர்களிடம் பாடிய போது 30 லட்சம் ஸ்லோகங்களாக பாடினார். அதன் பின்னர் வசிஷ்ட மகரிஷியும், தேவல மகரிஷியும் மகாபாரதத்தை 15 லட்சம் ஸ்லோகங்களாக பித்ரு லோகத்தில் பாடி வைத்தனர். அதன் பின்னர் ரிஷி சுகதேவர், யக்ஷ்ர் மற்றும் நாகர்களுக்காக மகாபாரதத்தை பாடிய போது 14 லட்சம் ஸ்லோகங்களாக பாடினார். துவாரபரயுக முடிவில் ரிஷி வைசம்பியனர், ராஜா ஜனமேஜயன் மற்றும் பிற ரிஷிகளிடம் மகாபாரதத்தை கூறிய போது 1 லட்சம் ஸ்லோகங்களாக பாடினார். 

ஜெய் கணேஷா !!

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!!

Monday, 20 September 2021

60 Lakh Shlokas (Slokas) in Mahabharata

Mahabharata: 60 Lakh Shlokas

Mahabharata: 6 million Shlokas

Once Thirumuruga Kirupanandha Variyar Swamigal shared this message in one of his stage speeches.

Once upon a time, Sage Vyasa spent three years in severe penance in the Himalayas. During his penance, the history of the Mahabharata appeared in his thoughts. Brahma appeared before him and ordered him to sing the Mahabharata. 

Writing would restrict the singer's speed, hindering the flow of the narrative and the performance of the epic. Therefore, Vyasa thought about who could write and finish the Mahabharata while he was singing. So he decided that Ganesha was suitable for writing Mahabharata.

He worshipped Ganesha. Ganesha appeared before him. Vyasa prayed to him, 'I will sing the Mahabharata, and you would write it down.'

Ganesha agreed and said, "I will write fast. Can you sing at the speed I write?" Vyasa was stunned to hear that. Then Vyasa admitted that he sings according to the pace at which Ganesha was writing. He also made a condition that Ganesha had to understand every word before he wrote it down.

Ganesha agreed that he would write once he understood the meaning of the song. Once Vyasa began to sing, Ganesha used his trunk for writing the song on the Meru hill. Vyasa sang 60 lakh slokas. In this process, Vyasa included 8800 difficult verses to slow down Ganesha's writing speed. When Ganesha thought for a moment what this meant, Vyasa prepared several verses in his mind. 

The original Mahabharata, written by Ganesha and dictated by Vyasa, contained 60 lakh shlokas. Later, when Narada narrated it to the Devas, it contained 30 lakh shlokas. When Rishi Vashist and Devala narrated the Mahabharata at Pitru Loka, it contained 15 lakh shlokas. The number of Shlokas further reduced to 14 lakh when Rishi Sukadev spoke to Yakshya and Nagas. At the end of the Dwaparayug, Rishi Vaisampayana narrated the Mahabharata to Raja Janamejaya and other Rishis, and it contained 1 lakh shlokas.

Saturday, 18 September 2021

யுகம் - யுகங்களின் கணக்கு

யுகங்கள் - யுகங்களின் கணக்கு

யுகம் என்பது இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கால கணிப்பு முறையில், காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று. புராணங்களும் அவற்றின் வழிநூல்களும் யுகங்களையும், காலத்தையும் எவ்வாறு விளக்குகின்றன என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்:

தேவர்களின் பகல் = உத்திராயண காலம் 6 மாதம் - தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆணி.

தேவர்களின் இரவு = தக்ஷிணாயன காலம் 6 மாதம் - ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி.

உத்திராயண காலம் 6 மாதம் + தக்ஷிணாயன காலம் 6 மாதம் = 1 மனிதவருடம் = 1 தேவ நாள்.

360 மனித வருடங்கள் = 360 தேவ நாட்கள் = 1 தேவ வருடம்.

4800 தேவ வருடங்கள் = கிரேதாயுகம் = 17,28,000 ஆண்டுகள் (17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்).

3600 தேவ வருடங்கள் = திரேதாயுகம் = 12,96,000 ஆண்டுகள் (12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள்).

2400 தேவ வருடங்கள் = துவாபரயுகம் = 8,64,000 ஆண்டுகள் (8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்).

1200 தேவ வருடங்கள் = கலியுகம் = 4,32,000 ஆண்டுகள் (4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்).

1 சதுர்யுகம் = கிரேதாயுகம் + திரேதாயுகம் + துவாபரயுகம் +  கலியுகம் = 43,20,000 வருடம் (43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்).

1000 சதுர்யுகங்கள் = 1 மஹாயுகம் அல்லது 1 கல்பம் = பிரம்மாவின் 1 பகல் = 4,32,00,00,000 ஆண்டுகள் (432 கோடி ஆண்டுகள்).

2 கல்பங்கள் = பிரம்மாவின் 1 நாள் = 8,64,00,00,000 ஆண்டுகள் (864 கோடி ஆண்டுகள்).

360 பிரம்ம நாட்கள் =  1 பிரம்ம வருடம் = 31,10,40,00,00,000 ஆண்டுகள் (3 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ஆண்டுகள்).

100 பிரம்ம வருடங்கள் = 1 பிரம்மாவின் ஆயுட்காலம் = 31,10,40,00,00,00,000 ஆண்டுகள் (3 கோடியே 11 லட்சத்து 4 ஆயிரம் கோடி ஆண்டுகள்).

1 கோடி பிரம்ம ஆயுட்காலங்கள் = விஷ்ணுவின் 1 பகல் = 3,11,04,00,00,00,00,00,00,00,000 ஆண்டுகள் (3 கோடியே 11 லட்சத்து 4 ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்).

2 கோடி பிரம்ம ஆயுட்காலங்கள் = விஷ்ணுவின் 1 நாள் = 6,22,08,00,00,00,00,00,00,00,000 (6 கோடியே 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்).

360  விஷ்ணு நாட்கள் = 1 விஷ்ணு வருடம் = 22,39,48,80,00,00,00,00,00,00,00,000 ஆண்டுகள் (2 ஆயிரத்து 239 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்).

100 விஷ்ணு வருடங்கள் = 1 விஷ்ணுவின் ஆயுட்காலம் = 22,39,48,80,00,00,00,00,00,00,00,00,000 ஆண்டுகள் (2 லட்சத்து 23 ஆயிரத்து 948 கோடியே 80 லட்சம் கோடி கோடி ஆண்டுகள்).

1 கோடி விஷ்ணுவின் ஆயுள் = 2,23,94,88,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 ஆண்டுகள் (2 லட்சத்து 23 ஆயிரத்து 948 கோடியே 80 லட்சம் கோடி கோடி கோடி ஆண்டுகள்) = சிவபெருமானுக்கு கண் இமைக்கும் நேரம்.

திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடல் வரிகளில் ஈசனின் வயது என்ன என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி சொல்கிறார்:

'நூறு கோடி பிரமகர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்கனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறி லாவன் ஈசன் ஒருவனே'