Saturday 28 September 2019

Difference Between Pipe and Tube

Pipe Vs Tube


The industrial age is slowly fading away and the information age is already at the beginning. At the peak phase of the information age, sharing knowledge is the only way to multiply our knowledge and wealth.

Let us enter into the Topic.

We are going to compare the pipes and tubes that are used in the Oil & Gas and Shipbuilding industries:

Let us know what are pipes and tubes?

A pipe is usually a hollow cylinder of circular cross-section, used mainly to convey substances which can flow such as liquids and gases (fluids), powders, slurry, and masses of small solids.

Whereas pipe is a round cross-section, tubes can come in different shapes such as square, rectangular and cylindrical cross-section, which is also used mainly to convey substances which can flow such as liquids and gases (fluids), powders, slurry and masses of small solids.

Let us compare the engineering aspects of the circular cross-sections:

Size:  

# The pipe size is generally specified by a nominal diameter or nominal bore.

# The tube size is specified by its OD.

Wall Thickness: 

# The pipes wall thickness is defined by schedule number.

# The tubes wall thickness is measured in millimeters or inches.

Outside Diameter: 

# The OD of the pipe up to size 12” are numerically larger than corresponding pipe size

# The OD of the tube is numerically equal to the corresponding size.

Selection:

# In oil and gas or shipbuilding industries, the selection of the pipe depends upon the ID because it varies for each Schedule. 

# In oil and gas or shipbuilding industries, the selection of the tube can go with its OD due to its thinner wall thickness.  

From the below table, we are going to see some major differences between pipe and tube:


Pipe Verses Tube
Pipe
Tube
1
Key Dimensions (Pipe and Tube Size Chart)
The most important dimension for a pipe is the inside diameter (ID), expressed in NPS (nominal pipe size) or DN (nominal diameter), which defines its fluid conveyance capacity. The NPS does not match with its inside diameter, it is a rough measurement.
The most important dimensions for a tube are the outside diameter (OD) and the wall thickness (WT). These parameters are expressed in inches or millimeters and the OD of the tube is numerically equal to the corresponding size.
2
Wall Thickness
The thickness of a pipe is designated with a “Schedule” value (the most common are Sch. 40, Sch. 80 and Sch. 160). Two pipes of different NPS and same schedule have different wall thicknesses in inches or millimeters.
The wall thickness of a tube is expressed in inches or millimeters. For tubing, the wall thickness is measured also with a wire gauge nomenclature (Birmingham Wire Gauge, Stubs Iron Wire Gauge).
3
Cross Section of Pipes and Tubes
Circular in Cross-Sections.
Circular, rectangular, square and oval in Cross-Sections.
4
Production range
Extensive (up to 80 inches and above).
A narrower range for tubing (up to 5 inches), larger for steel tubes for mechanical applications.
5
Tolerances (straightness, dimensions, roundness, etc) and Pipe verses Tube strength
Tolerances are set, but rather loose. Strength is not the major concern.
Tubes are produced to very strict tolerances. Tubes undergo several dimensional quality checks, such as straightness, roundness, wall thickness, surface, during the manufacturing process. Mechanical strength is a major concern for tubes.
6
Production Process
Pipes are generally made to stock with highly automated and efficient processes, i.e. pipe mills produce continuously and feed distributors stock around the world.
The tubing requires many more production operations to make a finished product. It is normally of a lot higher quality than the pipe, resulting in increased testing and inspections. Pipe production far outweighs tubing production.
7
Delivery time
Can be deliverable in short period.
In common, delivery takes a long period from the date of order placed.
8
Market price
Relatively lower price per ton than the tubes.
Higher due to lower mills productivity per hour, and due to the stricter requirements in terms of tolerances and inspections.
9
Materials
A wide range of materials is available.
Tubing is available in carbon steel, low-alloy steel, stainless steel, and nickel-alloys and Steel tubes for mechanical applications are mostly of carbon steel.
10
End Connections
Pipes are typically connected by threading the ends and screwing together with couplings, T’s, or elbows. Another common way of connecting pipes is welding them together or to other components, such as flanges.
Tubes can be connected by flaring, brazing, tube couplings, or welding.  Pressures within the tube normally dictate the type of coupling used.

 

Sunday 22 September 2019

Nature Gift

NATURE

Nature - It includes everything


It always alive


It looks always beautiful


It always radiant


It always change


It always blossoms


 It is very special for everyone


Wednesday 18 September 2019

Where I Belongs

Malayalapatti


An Agricultural field in Malayalapatti Village

Ganesh Chaturthi in Rnaval


Ganesh Chaturthi Celebration in Reliance Naval and Engineering Limited, Pipavav

Sannasiyappan Temple, Malayalapatti

Rituals Prior to follow in Sannasiyappan Temple Kumbabishekam, Malayalapatti


Tuesday 17 September 2019

சந்திரன் சொன்ன சாட்சி

சந்திரன் சொன்ன சாட்சி 

ராசு விவசாய தொழில் செய்து வருபவன். ராசுவிற்கு சில ஏக்கர் நஞ்சை நிலங்கள் உண்டு. ராசு உழைப்பாளி கொஞ்சம் வசதிக்காரன், கொஞ்சம் இரக்க குணம் கொண்டவன். ராசுவின் மனைவி அங்கம்மா. இருவருக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் என ஒரு அழகான குடும்பம். பருவ வயதிலேயே தாய் தந்தையை இழந்த அவன் கடுமையாக உழைத்து முன்னேறி நன்னிலைக்கு வந்தவன். ராசுவின் பக்கத்து வீட்டுக்காரன் முத்து, முத்துவோ ஏழ்மை நிலையில் இருப்பவன், கொஞ்சம் சோம்பேறியும் கூட. முத்துவுக்கோ தாய், தந்தை, மனைவி மற்றும் மூன்று மகன்கள் என கொஞ்சம் பெரிய குடும்பம். ராசுவிடம் முத்து, அவன் மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தன் குடும்ப நிலையை காட்டி, அடிக்கடி கொஞ்சம் கடன் கேட்பான், முத்துவின் ஏழ்மை நிலை கண்டு மறுக்காமல் ராசுவும் கொடுத்து விடுவான்.

முத்துவுக்கோ வாங்கிய கடனை திருப்பி தரும் பழக்கமே இல்லை. ராசுவுக்கு ஒரு வருடம் நல்ல விளைச்சல் அதனால் நல்ல வருமானம் இருந்தது. இதை தெரிந்து கொண்ட முத்து, அவனிடம் புதிதாக தொழில் தொடங்க இருப்பதாக கூறி ஒரு பெரிய தொகையை கடனாக கேட்டான். ராசு சற்று தயங்க, அதை புரிந்து கொண்ட முத்து, தான் நல்ல நிலைக்கு வந்தவுடன் கண்டிப்பாக இதற்க்கு முன் வாங்கியது மற்றும் இப்பொழுது பெறப்போகும் தொகை முழுவதையும் வட்டியும் அசலுமாக ஒரு குண்டுமணி கூட குறையாமல் கொடுத்து விடுவதாக கெஞ்சினான், ராசுவோ முத்து நல்ல நிலைக்கு வரட்டுமே என்ற நல்ல எண்ணத்தில், தன்னுடைய மனைவிக்கே தெரியாமல் அவன் கேட்ட தொகையை, எந்த சாட்சியும் இல்லாமல் நம்பிக்கையின் பேரில் கடனாக கொடுத்து விட்டான். முத்து புதிதாக தொழில் தொடங்கினான்,  வீட்டில் இருந்தவர்கள் ஏது  இவ்வளவு பணம் எனக் கேட்டதற்கு யாருக்கும் தெரியாமல் வெகு நாட்களாக சேமித்து வந்ததாக ஒரு கதை சொல்லி சமாளித்து விட்டான்.

நாட்கள் நகர்ந்தன முத்து தொழிலில் கொஞ்சம் கால் ஊன்றினான். கொஞ்சம் வசதி படைத்தவனானான். பணம் சேர சேர அவனிடம் இருந்த கொஞ்சநஞ்ச இரக்க குணமும் அவனை விட்டு போனது. அவனுக்கு ராசுவிடம் வாங்கிய கடனை திருப்பி தர மனமில்லாமல் போனது. எங்காவது போய் இவன் செத்து தொலைய மாட்டானா என நினைக்கத் தொடங்கினான். ராசுவை எங்கு கண்டாலும் கண்டும் காணாததும் போல் இருக்கத் தொடங்கினான். ஒரு நாள் முத்துவை தனியாக சந்தித்த ராசு, தான் கொடுத்த தொகையை திருப்பி தருமாறு கேட்டான். கொஞ்சம் நாள் போகட்டும் அந்த செலவு இருக்கிறது இந்த செலவு இருக்கிறது என சாக்கு சொன்னான். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு காரணம் சொல்லி ஏமாற்றி வந்தான். இதனால் பொறுமை இழந்த ராசு, ஒருநாள் முத்துவை தனியாக சந்தித்து, பஞ்சாயத்தில் சொல்ல போவதாக மிரட்ட, இரண்டே இரண்டு மாதம் கால அவகாசம் தருமாறு கெஞ்சி நாடகமாடினான். ராசுவும் ஒப்புக் கொண்டான்.

ஒரு மாதம் ஓடி விட்டது, அன்று பௌர்ணமி நாள், நிலவின் வெளிச்சமோ பட்டப் பகல் போல் ஒளி வீசி கொண்டு இருந்தது. அடுத்த நாள் ஓர் அவசர வேலையாக வெளியூர் செல்ல இருந்ததால் ராசு தன் மனைவி அங்கம்மாவிடம் தோட்டத்திற்கு சென்று இரவிலேயே தண்ணீர் பாய்த்து விட்டு வந்து விடுவதாக சொல்லி, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். மொட்டை மாடியில் உறக்கம் வராமல் படுத்து இருந்த முத்து, ராசு இரவில் தனியாக தன்  தோட்டத்திற்கு செல்வதை கண்டான், யாருக்குமே தெரியாதவாறு அவனை பின் தொடர்ந்தான். தோட்டத்திற்கு சென்ற ராசு மண்வெட்டியை வயல்வரப்பின் மேல் வைத்து விட்டு, வாய்க்காலில் இறங்கி குனிந்தவாறு தோட்டத்து வாய்க்கால் மண்ணை கையால் அள்ளி கரை அனைத்து கொண்டு இருந்தான். அவன் பின்னால் சத்தமில்லாமல் வந்த முத்து அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து ராசுவின் தலையில் ஓங்கி ஒரு வெட்டு வெட்டினான். தடுமாறியபடி திரும்பிய ராசு முத்துவைக்  கண்டான், அதிர்ச்சியாலும் வலியாலும் நிலைகுழைந்த ராசு விழுந்து சரியும் பொழுது "நீ வாங்கிய கடனுக்கும், நீ செய்த இந்த செயலுக்கும் அந்த சந்திரனே சாட்சி, அந்த சந்திரனே சாட்சி" என நிலவை நோக்கி கை காட்டியவாரே உயிரை விட்டு விட்டான்.

அங்கம்மாவோ, கணவன் சீக்கிரம் வருவான் என காத்திருந்தவள் களைப்பில் சற்று கண்ணயர்ந்தாள், கண் விழித்து பார்க்கையில் விடிந்து இருந்தது, என்ன இன்னும் இந்த ஆளை காணோம் என வீடு முழுவது தேடியவள், மனம் பொறுக்காமல் தோட்டத்திற்கு போனால். அங்கு அவள் கணவனை பிணமாக கண்டாள், அதிர்ச்சியில் கதறத் தொடங்கினாள். சத்தம் கேட்ட ஊரார் எல்லோரும் கூடி விட்டனர்,அங்கு ஒன்னும் தெரியாதவன் போல் வந்த முத்துவும் பேருக்கு தலையை காட்டி விட்டு நீலி கண்ணீர் வடித்துவிட்டு சென்றுவிட்டான். காவலர்களும் வந்தனர் விசாரணையும் நடத்தினர், என்ன முயற்சித்தும் யாருக்கும் எந்த ஒரு துப்பும் எந்த ஒரு தடயமும் கிடைக்காமல் போனது.

காலங்கள் நகர்ந்தது. ஊர் மக்களும் ராசுவை மறந்தனர். ராசுவின் கொலை வழக்கும் நீர்த்துப் போனது. மீண்டும் ஒரு பௌர்ணமி தினம், மொட்டை மாடியில் மனைவியோடு உறங்கி கொண்டு இருந்தான் முத்து. முத்துவின் மனைவி தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். முத்துவிற்கும் திடீரென்று தூக்கம் கலைந்து விட்டது. கண் விழித்த போது முகத்திற்கு நேராக முழு நிலவினைக் கண்டான். சற்று நேரம் நிலவைக் பார்த்துக்கொண்டிருந்த முத்து, "இந்த சந்திரன் தான் வந்து சாட்சி சொல்ல போகிறானா" என்று லேசாக முனுமுணத்தவாறு ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தான். தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்த முத்துவின் மனைவி என்ன சந்திரன்! என்ன சாட்சி! என கேட்க அதிர்ந்து போன முத்து ஒன்னும் இல்லை என சமாளிக்க முயன்றான். ஏதேதோ சொல்லி பார்த்தான் அவள் நம்புவதாக இல்லை. இறுதியாக அவளிடம் உயிரே போனாலும் வெளியே சொல்ல மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டான். அவனுடைய மனைவியும் தப்பித்தவரியும் ரகசியம் கசியாமல் பார்த்துக்கொண்டாள்.

நாட்கள் உருண்டோடின.   ஒருநாள் முத்துவின் மூத்த  மகனிடம், முத்து கொஞ்சம் பணம் கொடுத்து வங்கியில் செலுத்தி விட்டு வர சொன்னான். வங்கிக்கு சென்ற முத்துவின் மகன் வழியில் பணத்தை தொலைத்து விட்டான். வீட்டிற்க்கு வந்து முத்துவிடம் பணம் தொலைந்ததை சொல்ல கோபத்தின் உச்சிக்கே போனான் முத்து. மகனை  போட்டு அடித்து துவைக்க ஆரம்பித்தான், பதைபதைத்த முத்துவின் மனைவி ஓடி வந்து தடுத்தாள் அவளையும் அடிக்க ஆரம்பித்தான். வீட்டிற்குள் இருந்து வந்த இரைச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் முத்துவின் வீட்டிற்கு வெளியில் கூடி விட்டனர். ஒருகட்டத்தில் முத்துவின் அடியின் வலி தாங்க முடியாத முத்துவின் மனைவியோ "ராச அடிச்சி கொன்ன மாதிரியே என்னையும் அடிச்சி கொல்றானே..." என கத்தி ஓலமிட்டாள். அவள் வாயை ஓடி சென்று பொத்தினான், அனால் இரண்டு கரங்களால் ஊரார் அனைவரின் கதையும் பொடித்த முடியுமா. அவ்வளவுதான் உண்மை ஊருக்கு அம்பலமானது. முத்து காவலர்களால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டான், விசாரணையில் உண்மை அனைத்தும் வெளிவந்தது. பின்னர் நீதிமன்றத் தீர்ப்பால் ஆயுள் கைதியானான்.

ஆம் உண்மையில் சந்திரன் நேரில் வந்து சாட்சி சொல்லவில்லை,
ஆனால் சந்திரனே சந்தர்ப்பமாக வந்து சாட்சியும் சொன்னான்.

நல்லதை மட்டுமே

ஒரு ஊரிலே ஒரு கிழவி இருந்தார். அவர் மிகவும் ஏழ்மையான சூழலில் இருப்பவர், அவருக்கு படிப்பறிவும் கிடையாது. ஆனால், ஊரிலே யாராவது ஆன்மீக பேச்சாளர்கள் அல்லது சொற்பொழிவாளர்கள் பேச வந்தால், என்ன வேலை இருக்கிறதோ இல்லையோ, அந்த வேலையெல்லாம் விட்டு விட்டு, போய் உட்கார்ந்து விடுவாராம், அந்தச் சொற்பொழிவினைக் கேட்பதற்கு, அவருக்கு ஒன்றும் விளங்காது, உட்கார்ந்து சொற்பொழிவு விடிய விடிய கேட்டுவிட்டு காலையிலே வேலைக்கு போவார், அவருக்கோ வயலிலே வேலை, அந்த வேலைக்கு உரியவன் இந்த கிழவியை திட்டுவார். இரவெல்லாம் தூங்காமல் நித்திரை விழித்து, இங்கு வந்து வேலை செய்யாமல் இப்படி தூங்கினால் என்ன செய்வது என்று திட்டுவார் .

ஒரு நாள் இதே போல இரவெல்லாம் நித்திரை விழித்து சொற்பொழிவு கேட்டுவிட்டு மறுநாள்  காலையிலே வேலைக்கு போகிறார், அன்று அவர் வயலிலே வேலை செய்யும் பொழுது சோர்வாக இருந்தார், அதை கண்ட தோட்டக்காரன் கிழவியை திட்டினார். உங்களுக்கு என்ன விளங்குகிறது என்று சொற்பொழிவு கேட்க போகிறீர். சரி உங்களுக்கு விளங்குகிறதனால் நேற்று பேச்சாளர் என்ன சொன்னார் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார், அதற்க்கு இந்த கிழவி ரொம்ப நல்லா சொன்னார் என்றார், ரொம்ப நல்ல சொன்னார் என்கிறீர்களே அப்படி என்னதான் சொன்னார் என்றார் தோட்டக்காரர். அதை ஏன் கேட்கிறீர்கள் ரொம்ப ரொம்ப நன்றாக சொன்னார் என்றார் கிழவி.

தோட்டக்காரருக்கு கோபம் வந்து விட்டது, உங்களால் ஒரு வரி கூட சொல்ல முடியவில்லையா என கேட்க பதிலுக்கு கிழவியும் எல்லாமே நல்லாத்தான் இருந்தது சாமி என்றார். பின் தோட்டக்காரர் கேட்டார், அட கிழவி! உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? ஒரு வரி கூட உங்களால் சொல்ல முடியவில்லை.. ஏன் போய் கூட்டத்தை வீணாக நிரப்புகிறீர்கள். வேறு எங்காவது போய் வேலை பார்க்கலாம் தானே, உங்களுக்குத்தான் தான் அறிவில்லை, படிப்பில்ல்லை, இதை ஏன் வீணாக போய் கேட்டு உங்களுடைய  காலத்தையும் வீணாக்கி, அவர்களின் நேரத்தையும் வீணாக்கி, எதற்காக  இவ்வாறு பயனில்லாத வேலையெல்லாம் செய்கிறீர்கள் என்றார்.

பொதுவாக கிழவிகள் என்றாலே குசும்புக்காரர்கள் தான், அதற்க்கு இந்த கிழவி என்ன செய்தார் தெரியுமா! அங்கே ஒரு மண் அள்ளுகிற கூடை இருந்தது, அந்த கூடையில் அப்படியே மண் ஒட்டியபிடி  இருந்தது, அந்த தோட்டக்காரனை அழைத்து தம்பி கொஞ்சம் இங்கே வந்து நான் சொல்வதை ஒருமுறை செய்யுங்கள், என்று அவரை கூப்பிட்டு, இந்த கூடையிலே அங்கு ஓடும் ஆற்றில் போய் தண்ணீர் அள்ளி வாருங்கள் என்றார். கூடையில் ஆற்றுநீரை அள்ள  முடியுமா என்ன என்றுச் சொல்லி தோட்டக்காரர் சிரித்தார். பாட்டி உங்க வேலையை என்னையும் செய்ய சொல்றீங்களா. மண் அள்ளும் கூடையில் தண்ணீரை அள்ள முடியுமா என்றிளுக்க, அதெல்லாம் பேச வேண்டாம் தம்பி, கூடையில்  கொஞ்சம் தண்ணீரை அள்ளுங்க என்றார், இந்த கிழவி சொல்லுகிறாரே என்று அந்தக் கூடையை ஆற்றிலே போட்டுத் தண்ணீரை அந்த தோட்டக்காரர் அள்ள முயன்றார். கூடையில் தண்ணீர் நிற்குமா என்ன? நிற்க்கவில்லை இன்னொரு முறை அள்ளுங்கள்  என்றார் கிழவி, தோட்டக்காரரும் திருப்பி அள்ளினார், இப்பவும் தண்ணீர் நிற்க்கவில்லை, இன்னொரு முறை அவ்வாறே அள்ள சொல்ல மீண்டும் தோட்டக்காரர் முயற்சிக்க தண்ணீர் கூடையில் நிற்க்கவேயில்லை.

அப்பொழுது கிழவி கேட்டார், கூடையிலே தண்ணீர் நின்றதா என்று, தோட்டக்காரர் 'இல்லை' என்றார், ஆனால் கூடையை கவனித்து பார்த்தீர்களா, கூடையில் ஒட்டி இருந்த மண் மற்றும் அழுக்கெல்லாம் சுத்தமாக போய் விட்டதே என்றார். 

நீதி: 
நல்லவற்றை கேட்கிற பொழுது, அந்த விஷயம் நம் ஞாபகத்தில் நிற்க வேண்டும் என்று அவசியமில்லை. அந்த கணத்தில் நம் மனம் சுத்தம் ஆகிறதல்லவா அதுவே பெரும் பயன்.

நல்லதை கேளுங்கள் 
நல்லதை பேசுங்கள் 
நல்லதை  நினையுங்கள்
நல்லதை பாருங்கள்
உங்களுக்கு நடப்பதும் நன்மையாய் மட்டுமே அமையட்டும்.

இறுதி இலக்கு

கடவுளே! நான் அவனுக்கு எவ்ளோ நல்லது செஞ்சிருப்பேன், அட தெய்வமே! என்னத்த செஞ்சி என்ன பலன்? கடைசில அவன் எனக்கு இப்படி பண்ணிட்டானே! என்று சிலர் வெளிப்படையாக புலம்ப கேள்வி பட்டிருப்போம். ஏன்! நம் மனம் கூட சில சமயங்களில் இவ்வாறு புலம்பியிருக்கலாம்.

ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து உதவியை செய்துவிட்டு, மற்றவர்கள் நன்றி மறந்து விட்டதாகவும், தான் செய்த செயலே மிகவும்  உத்தமமானதாகவும்   எண்ணும் நண்பர்களே, புலம்புவதை ஒரு கணம் நிறுத்திவிட்டு நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்.

ஆத்மா மிகவும் பரிசுத்தமானது, அதனை தீயால் எரிக்கவோ, நீரால் மூழ்கடிக்கவோ, காற்றால் அசைக்கவோ முடியாது. ஓர் ஆன்மாவிற்கு மற்ற ஆன்மாவால் அழிவும் ஏற்படாது. அப்படிப்பட்ட அழிக்க முடியாத பரிசுத்தமான ஆத்மாவை எப்படி துன்பமானது பீடிக்கிறது?

ஆன்மாவானது ஓர் உடலை பெறும்பொழுது காரியங்களை ஆற்றுகிறது மற்றும் அனுபவத்தை பெறுகிறது. ஆற்றும் காரியங்களுக்கு ஏற்ப பலன்களை பெறுகிறது. சொர்க்கம் மற்றும் நரகம் மட்டும்தான் உயிரானவன் இறந்த பிறகு ஆத்மா போய் அடையும் இலக்கு கிடையாது. செய்யும் காரியத்திற்கு ஏற்ப எதோ ஒரு உலகத்தில் பிறப்பானது நிச்சயம் அமையும். உயர் உலகத்தில் பிறந்தால் அதை சொர்க்கமாகவும், கீழான உலகத்தில் பிறந்தால் அதை நரகமாகவும் நம்முடைய புனித நூல்கள் கூறுகிறது.

உயிரற்ற உடலிடம் போய் நாம் என்ன கதறினாலும் அசையாது, அது போல் உடலற்ற ஆன்மாவை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. ஏனென்றால், அது இறைவனின் ஒரு அங்கமாகும். நாம் ஒவ்வொரு காரியம் செய்யும் பொழுதும் ஆத்மாவிற்கு நாம் ஒரு சுமையை கூட்டுகிறோம். நற்காரியங்கள் செய்யும்போது புண்ணியத்தை சுமையாகவும், தீயவற்றை செய்யும்போது பாவத்தை சுமையாகவும் ஆன்மாவிற்கு கூட்டிவிடுகிறோம். ஆற்றாத காரியங்களுக்காக ஆத்மாவிற்கு எந்த ஒரு சுமையும்  கூடுவதில்லை, ஆனால் ஆற்ற வேண்டிய காரியங்களை செய்யாதபோது மீண்டும் ஆற்றத்தவறிய காரியத்தை ஆற்றவும், அதன் பலனை சுமக்கவும் வைக்கப்படுகிறது, அது மட்டுமின்றி காரியமாற்றாது ஓடி ஒழிய வழிவகுக்காதது ஆத்மாவாகும்.

எவ்வளவு நன்மை செய்தாலும், இல்லை எவ்வளவு தீமை செய்தாலும், அதன் பலனை நாம் தான் அனுபவிக்க போகிறோமோ அன்றி, அதை பெறுபவர்கள் கிடையாது. பாவம் புண்ணியம் இவ்விரண்டு சுமைகளை தூக்கி எரிந்து, முழுமையான விழிப்பை பெரும்பொழுது நமக்கு பிறப்பிறப்பு என்னும் பந்தத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. அதாவது இந்த அழியக்கூடிய ஜடவுலகிளிருந்து வெளியேறவும், அழிவற்ற உலகை அடையும் அனுமதி கிடைக்கிறது. செய்த புண்ணியத்தின் பலனை அனுபவிக்க ஆசை கொள்ளும் நாம், செய்த பாவத்தின் வலிகளை ஏற்க தைரியம் கொள்வதில்லை. ஆன்ம பலம் என்ற ஒரு வார்த்தை கேள்விப் பட்டிருப்போம், அந்த பலத்தினை பெறுவதற்கு நாம் காரியத்தை ஆற்றி அதன் பலனை துறக்க வேண்டும். அதாவது என்னால் தான் இந்த காரியம் செய்யப்பட்டது என்னும் ஆணவ எண்ணத்தை விட்டொழித்து, இந்த காரியத்தை செய்ய நம்மை ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது என்னும் அடக்க எண்ணம் உருவாக வேண்டும்.

அப்படியானால் இறைவன் என்ன செய்கிறான் என்றால், நமக்கெல்லாம் அப்படிப்பட்ட அழியா உலகை அடைய வழி காட்டுகிறான். இந்த ஜடவுலகம் மிக பெரியது, அதிலிருந்து வெளியேற நமக்கு ஒருவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது, அவர்தான் பரமாத்மா. காரணம் இவையாவும் அவர் திருவுள்ளம் கொண்டு படைக்கப்பட்டதாகும். அப்படியானால் அவர் ஒரு வழிகாட்டி தானா! நாம் கேட்பதை எல்லாம் கொடுக்க வல்லவர் இல்லையா என்னும் சந்தேகமும் நம்முள் எழலாம், அதற்க்கு விடையானது, இறைவனானவர் நாம் கேட்பதை எல்லாம் கொடுக்க வல்லவர் தான், ஆனால் நம் ஆசைக்கேற்ப்ப, கேட்பதை எல்லாம் அவர் கொடுத்தால்,  சிறிய வீட்டில் அளவிற்கு அதிகமான பொருளை நிரப்பினால் தங்க எவ்வாறு சிரமமாக போகுமோ அதுபோல, நம் வாழ்வும் கிடைக்கும் தேவைக்கதிகமான பொருள் சேர்ப்பினால், அவையாவும் முழுமையாக அனுபவிக்காமல் பொருளற்றுப் போகும்.ஆனால் ஒரு உண்மையை நாம் உணர வேண்டும், நாம் மனமார ஏற்க வல்லதை, நம் வாழ்வின் சுகத்தினை, நமக்கு தேவையானதை கொடுப்பவன் இறைவனாவான்.

பலனைத் துறந்து ஆன்மாவிற்கு பாரத்தினைக் குறைத்து, இறைவனின் வழிகாட்டுதலால், நல்லுலகம் செல்லுவோமாக. இறைவனை காண மார்க்கம் இரண்டு, அது ஒன்று பக்தி மற்றொன்று அன்பு. பக்தி இல்லையேல் அன்பு நிச்சியம் உதட்டளவில் தான் இருக்கும். அன்பு ஒன்றால் இறைவனை அழைத்து பக்தி செலுத்தி வாழ்வோமாக.

1 logical question

There is a bridge, the length of the bridge is 2km, The capacity of the bridge is below 50ton and below, if the load is above 50ton means surely the bridge will be Break, For ex : Even above 50ton 100gm not acceptable.

A lorry having 50ton capacity cross almost 90% of the bridge suddenly a hunter shoot the bird,Unfortunately the bird fell down in the top of the lorry, But the lorry crossed the bridge successfully without any breaking of bridge, how it is possible?

Ans: 90% of the bridge distance is 1.8km, if the lorry crossing this distance, it consumes fuel. So, the fuel consumed by lorry for crossing the distance balanced the weight of the bird.

Perumal Malai, Erayamangalam

Ilaiya Perumal Malai, Erayamangalam


இளைய பெருமாள் மலை, இறையமங்கலம் :

 

இளைய பெருமாள் மலை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், காவிரி ஆற்றின் வடகரையில், இறையமங்கலம் என்னும் ஊரின் அருகில் கோரகுட்டையில் அமைந்துள்ளது.
 

இளையபெருமாள் மலை திருசெங்கோட்டிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


இளைய பெருமாள் மலையில் அமைந்துள்ள திருத்தலத்தின் இறைவனின் திருநாமம் பிரசன்ன வெங்கடரமன மூர்த்தி. இங்குள்ள பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் இளைய பெருமாள் என்னும் திருநாமத்துடன் கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தெய்வங்களுடன் அருள்பாலிக்கிறார்.


இந்த திருத்தலத்தின் இறைவனை தரிசிப்பதற்கு 600 படிகள் ஏறி செல்ல வேண்டும்.


மலை மீது ஏறி செல்வதற்கு ஏற்றார் போல், பெரும் பொருள் செலவில் வெகு நேர்த்தியாக படிகள் அமைக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல், இறைவனை தரிசிக்க வரும் பக்தர்கள் களைப்பின்றி வர ஏற்றார் போல் மலை அடிவாரத்திலிருந்து மேலே செல்லும் வரை அஸ்பெஸ்டாஸ் ஷெட்டும், பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறி சென்று இறைவனை தரிசிக்க ஏற்றாற்போல், இறைவனினின் அவதார பெருமைகளை  பறைசாற்றும் சிறு சிறு மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளது.





கொரோனா காலம் என்பதால், மிகவும் புண்ணியம் தரும் இந்த திருத்தலத்தின் மலை அடிவாரம் வரை வந்து விட்டு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தலத்திற்கு சொந்த வாகனம் இல்லாது வரும் பக்தர்கள், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து இறையமங்கலம் செல்லும் பேருந்துகளை பிடித்து வந்து இறை தரிசனம் காணலாம். திருச்செங்கோட்டிலிருந்து இறையமங்கலத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே உள்ளது. சொந்த வாகனமில்லாமல் பேருந்துகளில் வரும் பக்தர்கள் மலையடிவாரத்தை அடைய இறையமங்கலத்திலிருந்து நேராக வடக்கு செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து வர வேண்டும்.

இனிதே இத்திருத்தலம் வந்து இளைய பெருமாளை தரிசித்து பேரருள் பெறுவீர்களாக.